ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்து நடத்தும் கூட்டு போர்ப்பயிற்சி தொடக்கம்
Aug 16 2017 1:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்து நடத்தும் கூட்டு போர்ப்பயிற்சி இன்று தொடங்கியது.
ஜப்பானின் தற்காப்பு படையும், அமெரிக்க கடற்படையின் 3-வது பிரிவும் இணைந்து நடத்தும் போர்ப்பயிற்சி, ஜப்பானின் எனிவா நகரின் ஹொக்கைடோ தீவில் இன்று தொடங்கியது. கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றம் காரணமாக, இந்த பயிற்சி நடைபெறவில்லை என்றும், இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்றுதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜப்பான் நாடுகளிடையேயான உறவை பலப்படுத்தவே இந்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 28-ம் தேதி வரை, 13 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் இவ்விரு நாடுகளை சேர்ந்த 3 ஆயிரத்து 500 படைகள் பங்கேற்றுள்ளன.