பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்பின் தொகுதியில் இடைத்தேர்தல் : மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹஃபீஸ் சயீத் புதியகட்சி போட்டி
Aug 14 2017 1:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்பின் தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலில், மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹஃபீஸ் சயீத் தொடங்கியுள்ள புதியகட்சி போட்டியிடுகிறது.
பனாமாகேட் ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார் நவாஸ் ஷெரிஃப். இதனையடுத்து அவர் வெற்றி பெற்ற லாகூர் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் தொடங்கியுள்ள புதிய அரசியல் கட்சி இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மும்பை உள்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹஃபீஸ் சயீத்தை, இந்தியா தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. அவர் பாகிஸ்தானில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.