ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செலவை குறைக்கும் உத்தியாக செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்திவிட்டு ஃபால்கான் 9 ராக்கெட்டை மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் தனது சோதனையில் வெற்றி பெற்றுள்ளது
Jun 24 2017 11:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒரு விமானம் தரையிறங்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், மணிக்கு பல மைல் வேகத்தில் சீறிப்பாயும் ராக்கெட்டை வெற்றிகரமாக தரையிறக்க முடியும் என்பதை இரண்டாவது முறையாக நிரூபித்து காட்டியுள்ளது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். பல்கேரியாவின் தகவல்தொடர்பு செயற்கைக்கோளை சுமந்து சென்ற ஃபால்கான் 9 ராக்கெட்டானது, திட்டமிட்டமிட்டபடி நேற்று ஏவப்பட்டது. குறிப்பிட்ட தொலைவு பயணித்த பின், முதல் பாகம் பிரிந்து பூமியை நோக்கி விரைந்தது. சரியாக 8 நிமிடங்களுக்கு பின்னர் புளோரிடாவின் கிழக்கு கரையோரத்தில் இருந்த டிரோன் கப்பலில் அந்த ராக்கெட் வெற்றிகரமாக தரையிறங்கியது.