சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு - 100-க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து மாயம் - வீடுகள் சேதம் - மீட்புப் பணிகள் தீவிரம்
Jun 24 2017 4:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மண்ணில் புதைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பைஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
சீனாவின் சிச்சுவான் மாகாணம் Maoxian பகுதியில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள கிராமம் அருகே இருந்த மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதில் 40 வீடுகள் மண்ணில் புதைந்தன. இதனால் 100-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மண்ணில் புதைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களின் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. மலையில் இருந்து சரிந்து விழுந்த கற்கள், ஆற்றின் குறுக்கே 2 கிலோமீட்டர் தூரத்திற்கு பரவியுள்ளன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.