அஃப்கனிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் நிகழ்த்திய கார் குண்டு தாக்குதலில் 24 பேர் பலி - 60 பேர் படுகாயம்
Jun 22 2017 4:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அஃப்கனிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் நிகழ்த்திய கார் குண்டு தாக்குதலில், 24 பேர் உயிரிழந்தனர். 60 பேர் படுகாயமடைந்தனர்.
அஃப்கனிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தாலிபான் தீவிரவாதிகள், பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். Lashkargah பகுதியில் உள்ள வங்கி அருகே வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரில் வந்த தீவிரவாதிகள், அதனை திடீரென வெடிக்க செய்தனர். இந்த தாக்குதலில், ராணுவ வீரர்கள், போலீசார், பொதுமக்கள் உட்பட 24 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், 60 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு தாலிபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.