ருமேனியாவில் அரசுக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி - ஆட்சி அமைந்த 6 மாதத்திலேயே கவிழ்ந்தது இடதுசாரி அரசு
Jun 22 2017 1:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ருமேனியா நாட்டில் இடதுசாரி அரசு ஆட்சி அமைந்து 6 மாதம் கூட ஆகாத நிலையில், பிரதமருக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி அடைந்தது.
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில், இடதுசாரி கட்சியான சமூக ஜனநாயக கட்சி 46 சதவிகித வாக்குகள் பெற்று ஆட்சியமைத்தது. அக்கட்சியின் சார்பில் Sorin Grindeanu பிரதமராக பொறுப்பேற்றார். நாட்டின் வளர்ச்சிக்கு அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆளுங்கட்சியினரே குற்றம்சாட்டினர். இதனால் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் நம்பிக்கை வாக்கு கோறும் நிலை ஏற்பட்டது. ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள 240 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், வெறும் 7 வாக்குகளே அரசுக்கு ஆதரவாக கிடைத்தது. இதனால், ஆட்சி அமைத்த 6 மாதங்களில் அரசு கவிழ்ந்தது. ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பலரும் தங்களது பதவியே ராஜினாமா செய்து பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.