பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் உள்ள ரயில் நிலையத்தில் தீவிரவாதத் தாக்குதல் நிகழ்த்த முயன்ற நபரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொலை
Jun 22 2017 1:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரின் மத்திய ரயில் நிலையத்துக்கு வந்த மர்ம நபர், அங்கிருந்த கூட்டத்துக்குள் நுழைந்து, அரேபிய மொழியில் கோஷம் எழுப்பியவாறு, தன்னிடமிருந்த பெட்டியை அங்கேயே விட்டு விட்டு ரயில் நிலையத்தின் மையப் பகுதிக்கு ஓடினார். பின்னர் அந்தப் பெட்டியின் ஒரு பகுதியில் தீப்பிடித்ததால் பதற்றம் ஏற்பட்டது. அப்போது அந்தப்பெட்டியில் இருந்த பெட்ரோல் வெடிகுண்டு அதிக சப்தத்துடன் வெடித்தது. இருப்பினும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த நிகழ்வின்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரால் சுடப்பட்ட அந்த நபர் உயிரிழந்தார். 36 வயதான அவர், பெல்ஜியம் மற்றும் பிரான்சில் ஏற்கெனவே நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் வசித்து வந்த மொலன்பீக் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.