பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் - அந்நாட்டுக்கு நிதியுதவியை குறைக்கவும் நடவடிக்கை
Jun 20 2017 4:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் டோனல்டு டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீவிரவாதிகளை ஊக்குவித்து வரும் பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. காஷ்மீர் பகுதியில் ஊடுருவி இந்தியாவில் நாசவேலைகளை நடத்தி வருவதுடன், அஃப்கனிஸ்தான் போன்ற அண்டை நாடுகளிலும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ஒடுக்கவும், தீவிரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டவும் அமெரிக்க அதிபர் டிரம்ப், புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்படி, பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதியுதவியை குறைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.