போர்ச்சுக்கல் நாட்டில் 200 கிலோ மீட்டர் தொலைவிற்கு பற்றி எரியும் காட்டுத் தீ - 62 பேர் உயிரிழப்பு - 3 நாள் அரசு முறை துக்கம் அனுசரிப்பு
Jun 19 2017 12:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
போர்ச்சுக்கல் நாட்டில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் சிக்கி 62 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான வனப்பகுதிகள் தீயில் எரிந்து கருகியுள்ளது.
போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள Pedrogao Grande வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. தீ சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் பரவியதையடுத்து, அப்பகுதி முழுவதும் எரிந்து கருகியது. இந்த தீ விபத்தில் இருவரை 62 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50 பேர் தீக்காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போர்ச்சுகல் தலைநகர் Lisbon பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிக்கு அருகில் தீ பரவி வருவதையடுத்து, அங்கு வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படுகின்றனர். இந்த விபத்தின் காரணமாக, போர்ச்சுக்கல் நாட்டில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.