ஈராக்கில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை கார் வெடிகுண்டு தாக்குதலில் 4 போக்குவரத்து போலீசார் பலி : தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்பு
Apr 29 2017 12:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈராக்கில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை கார் வெடிகுண்டு தாக்குதலில் 4 போக்குவரத்து போலீசார் பலியாகினர்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அபு நவாஸ் எனும் பகுதியில் உள்ள காவல்நிலையம் அருகே இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டிவந்த தீவிரவாதி காவல்நிலையத்தின் சுவரில் மோதி குண்டுகளை வெடிக்க செய்துள்ளான். இந்த தாக்குதலில் 4 போக்குவரத்து போலீசார் பலியாகினர். 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நிகழ்த்தப்பட்ட பகுதியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த ஊடக நிறுவனங்களின் அலுவலகங்கள் அமைந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.