பிரசிலில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் வன்முறை - பேருந்துகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதால் பதற்றம்

Apr 29 2017 12:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரசிலில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. இதில் ஏராளமான பேருந்துகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

பிரசிலில் தொழிலாளர் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. ரியோ-டி-ஜெனிரோ உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்ற பேரணிகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதிபர் Michel Temer இல்லத்தை நோக்கி ஏராளமானோர் பேரணியாகச் செல்ல முயன்றனர். ஆனால், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து, போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்தனர். பல்வேறு இடங்களில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் ஏராளமான பேருந்துகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பிரசிலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தில் இதுபோன்ற வன்முறை நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00