லண்டனில் நாடாளுமன்றம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் நடமாடிய மர்ம நபர் கைது : மற்றொரு சம்பவத்தில் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதால் பெரும் சதித்திட்டம் முறியடிப்பு

Apr 28 2017 10:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

லண்டனில் நாடாளுமன்றம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் நடமாடிய மர்ம நபரை போலீசார் கைது செய்தனர். மற்றொரு சம்பவத்தில் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதால் பெரும் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நாடாளுமன்றம் அமைந்துள்ள இடம் பாதுகாப்பு நிறைந்த பகுதியாகும். இங்கு ஏராளமான அரசுக் கட்டடங்கள் அமைந்துள்ளதால் பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்வர். அங்கு ஆயுதம் தாங்கிய போலீசார் நேற்று வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நாடாளுமன்றத்திற்கு வெளியே மர்ம நபர் ஒருவர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நடமாடியதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து, அந்த நபரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். 27 வயதான அந்த நபர் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. போலீசாரின் துரித நடவடிக்கையால் லண்டனில் தீவிரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லண்டனில் தீவிரவாதச் செயலில் ஈடுபட முயன்ற பெண் ஒருவரை பிரிட்டன் போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00