உலகின் தலைசிறந்த வீரர்கள் பங்கேற்கும், வருடாந்திர விமான சாகச நிகழ்ச்சி - சீனாவில் கோலாகல தொடக்கம்
Apr 27 2017 2:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகின் தலைசிறந்த வீரர்கள் பங்கேற்கும், வருடாந்திர விமான சாகச நிகழ்ச்சி சீனாவில் கோலாகலமாக தொடங்கியுள்ளது.
சீனாவின் Zhengzhou மாகாணத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சி பிரபலமானதாகும். இந்தப் போட்டியில் உலகின் தலைசிறந்த விமான சாகச வீரர்கள் பங்கேற்பார்கள் என்பதால், இப்போட்டிக்கு பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்போட்டியை காண்பதற்காகவே, சுற்றுலா பயணிகள் பலர் சீனாவுக்கு வருகை தருகின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான போட்டி, சீனாவின் Zhengzhou மாகாணத்தில் இன்று தொடங்கியது. வரும் மே மாதம் ஒன்றாம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் பிரிட்டன், ஃபிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி, லித்துவேனியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த உலகின் தலைசிறந்த 14 விமான சாகச குழுவினர் பங்கேற்றுள்ளனர். இதற்காக 42 சாகச விமானங்கள் ஷாங்ஜி விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.