வடகொரியாவுக்கு எதிராக போர் மூளும் சூழலில் தென்கொரியா - அமெரிக்க படைகள் இணைந்து விமானங்கள் மற்றும் ராணுவ டாங்கிகள் மூலம் ஏவுகணைகளை வீசியும், வெடிகுண்டுகளை வீசியும் கூட்டுப்பயிற்சி
Apr 26 2017 7:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடகொரியாவுக்கு எதிராக போர் மூளும் சூழலில், தென்கொரியா - அமெரிக்க படைகள் இணைந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
தென்கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் படைகள் இணைந்து பல்வேறு கூட்டுப்பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இந்தப்பியற்சியில் இருநாடுகள் சார்பில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், போர்விமானங்கள், ராணுவ டாங்கிகள், ஹெலிகாப்டர்கள் மூலம் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர். போர் விமானங்கள் மற்றும் ராணுவ டாங்கிகள் மூலம் ஏவுகணைகளை வீசியும், வெடிகுண்டுகளை வீசியும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்தப் பயிற்சி கடந்த 13, 21ம் தேதிகளைத் தொடர்ந்து இன்றும் நடத்தப்பட்டது. இருநாடுகளின் உக்கிரமான இந்த கூட்டுப்பயிற்சி கொரிய தீபகற்பப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.