ஈராக்கின் மொசூல் நகரில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் மறைவிடங்களை குறிவைத்து அந்நாட்டு ராணுவ விமானங்கள் - அமெரிக்க போர் விமானங்கள் குண்டுகள் வீசி தாக்குதல் : 100-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்
Mar 26 2017 6:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈராக்கின் Mosul நகரில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் மறைவிடங்களை குறிவைத்து அந்நாட்டு ராணுவ விமானங்கள் மற்றும் அமெரிக்க போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் 100-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள நகரங்களை அந்நாட்டு ராணுவமும், அமெரிக்க கூட்டுப்படைகளும் இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தி மீட்டு வருகின்றன. ஈராக்கின் முக்கிய நகரமான மொசூலை மீட்க, கடந்த ஒரு மாத காலமாக அரசு படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் மொசூல் நகரில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் மறைவிடங்களை குறிவைத்து அந்நாட்டு ராணுவ விமானங்களும், அமெரிக்க போர் விமானங்களும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் 100-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன. மொசூல் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆபத்தான நிலையில் சிக்கிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.