ஐ.எஸ். துணைத்தளபதிகள் அனைவரும் பலியான நிலையில், எந்த நேரத்திலும் ஐ.எஸ். அமைப்பின் தலைவன் அல் பாக்தாதி கொல்லப்படுவார் -அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் திட்டவட்டம்
Mar 24 2017 9:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.எஸ். துணைத்தளபதிகள் அனைவரும் பலியான நிலையில் 'எந்த நேரத்திலும் அந்த அமைப்பின் தலைவனான அல் பாக்தாதி கொல்லப்பட்டு விடுவார் என அமெரிக்க அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை முழுமையாக தோற்கடிப்பது குறித்த 68 உலக நாடுகள் கொண்ட கூட்டணி பேரவையின் கூட்டம், வாஷிங்டனில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் Rex Tillerson பேசும்போது, "ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் துணைத்தளபதிகள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர். குறிப்பாக பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்டவரும் சாகடிக்கப்பட்டு விட்டார். எந்த நேரத்திலும் அந்த அமைப்பின் தலைவனான அல் பாக்தாதி கொல்லப்பட்டு விடுவார்" என உறுதிபடகூறினார்.
ஈராக்கின் முக்கிய நகரமான மொசூல் நகரத்தை ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து முழுமையாக மீட்பது பற்றியும் அவர் குறிப்பிட்டார். அப்போது அவர், "ஈராக் படைகள், குர்து பெஷ்மெர்கா படைகளின் ஒத்துழைப்பு இன்றி, மொசூல் நகரை ஐ.எஸ். அமைப்பிடம் இருந்து முழுமையாக மீட்டு விட முடியாது" என்றும் குறிப்பிட்ட அவர், ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போரில் புதிய கூட்டாளியாக இன்டர்போல் என்னும் சர்வதேச போலீசும் இணைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.