இங்கிலாந்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
Mar 24 2017 9:38AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில், நாடாளுமன்றத்தின் அருகே தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஐந்து பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் துணைநிற்கும் விதமாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள 'ஈஃபிள் டவர்' மின்விளக்குகள் அணைக்கப்பட்டது. இதனிடையே, இங்கிலாந்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் தொடர்பாக 8 பேரை கைது செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.