ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நிகழ்த்திய கார் வெடிகுண்டுத் தாக்குதலில் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த 6 காவல்துறை அதிகாரிகள் உடல் சிதறி உயிரிழந்தனர்
Mar 22 2017 12:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தின் தெற்கு பகுதியில், அந்நாட்டு புலனாய்வு படையினரின் சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இந்த சோதனைச் சாவடியில் தீவிரவாதிகள் திடீரென வெடிகுண்டுகள் நிரம்பிய காரை மோதி வெடிக்கச் செய்தனர். இத்தாக்குதலில் அலுவலகத்தில் இருந்த 6 காவல்துறை அதிகாரிகள் உடல்சிதறி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 7 பேர், அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூரத் தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. ஆனால், தாலிபான் இயக்கத்தினருக்கு, இச்சம்பத்தில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேத்தின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆப்கனிஸ்தானில் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக பன்னாட்டு ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில், போலீஸ் அதிகாரிகள் மீது தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்களை நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.