நெடுந்தூர பயணத்தில் ஆர்வம் கொண்ட ஒரு குடும்பத்தினர் சுமார் மூன்றரை ஆண்டுகளாக டிரக்கில் வாழ்ந்தபடியே இதுவரை 34 நாடுகளை சுற்றிவந்து தற்போது இந்தியா வருகை
Feb 25 2017 12:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இங்கிலாந்து Southampton பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியர், நெடுந்தூர பயணத்தில் ஆர்வம் கொண்டு, அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக, டிரக் ஒன்றில் மூன்றரை ஆண்டு காலமாக, பயணித்தவாறு அவர்கள் 34 நாடுகளை சுற்றி பார்த்துள்ளனர். தற்போது இந்த தம்பதியினர் இந்தியாவிற்கு வந்துள்ளனர். இந்த பயணம் குறித்து அவர்கள் கூறும் போது, நெடுந்தூர பயணத்தில் அதீத ஆர்வம் இருந்த காரணத்தால் உலகை சுற்றிப் பார்க்க ஒரு நீண்ட கால பயணத்தை செய்யலாம் என நாங்கள் திட்டமிட்டோம். அதன்படி தற்போது இந்தியாவை சுற்றி பார்க்க வந்துள்ளோம் என தம்பதியர் தெரிவித்துள்ளார்.