சிரியாவில் நிகழ்ந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 70 பேர் உயிரிழப்பு : படுகாயமடைந்தவர்களின் பலரது நிலை கவலைகிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும்
Feb 26 2017 11:24AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிரியாவில் நிகழ்ந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்களின் பலரது நிலை கவலைகிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மற்றும் உள்ளூர் போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்க அரசு படை போராடி வருகிறது. சமீபத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அலெப்போ மாகாணத்தை சேர்ந்த al-Bab பகுதி தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்டது. மேலும் சிரியாவில் இருந்து தீவிரவாதிகளை விரட்டியடிக்க துருக்கி படையினரும் விமான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் al-Bab நகர் அருகேயுள்ள Sousian பகுதியில்வெடிகுண்டுகளை நிரப்பி வந்த காரை தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் வெடிக்க செய்ததில், 70 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலரின் நிலைமை கவலைகிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.