பெரு நாட்டில் பயணிகள் பேருந்து நிலைதடுமாறி ஆற்று வெள்ளத்தில் கவிழ்ந்ததால் பரபரப்பு : பேருந்தில் இருந்தவர்கள் ஜன்னல்கள் வழியாக பத்திரமாக வெளியேற்றம்
Feb 25 2017 9:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரு நாட்டில் பயணிகள் பேருந்து நிலைதடுமாறி ஆற்று வெள்ளத்தில் கவிழ்ந்தது. அந்தப் பேருந்தில் இருந்தவர்கள் அதன் ஜன்னல்கள் வழியாக பத்திரமாக வெளியேறினர்.
பெரு நாட்டின் Andes பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, Piura நகர் அருகே சென்றபோது நிலைதடுமாறி கவிழ்ந்து ஆற்று வெள்ளத்தில் சிக்கியது. இதனால் பேருந்தில் சிக்கிய பயணிகள் பதற்றமடைந்தனர். பின்னர், ஜன்னல்கள் வழியாக தப்பித்து வெளியேறினர். பேருந்திலிருந்து வெளியேற முடியாமல் சிக்கித் தவித்த சிலரை உள்ளூர் மக்கள், பத்திரமாக மீட்டனர். விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆற்றின் வெள்ளம் காரணமாக சாலைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.