சீனாவில் அடுக்குமாடியில் தீப்பற்றிய சிலிண்டரை துணிச்சலுடன் அப்புறப்படுத்திய காவல்துறை அதிகாரி - வியந்து பாராட்டிய பொதுமக்கள்
Feb 25 2017 11:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில், வீட்டு உபயோகத்திற்கான ப்ரோப்பேன் வாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது. அதனை காவல்துறை அதிகாரி ஒருவர், கையில் சுமந்தவாறே கட்டடத்தின் கீழ் தளம் வரை எடுத்துச் சென்று அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதை அப்பகுதி மக்கள் வியந்து பாராட்டினர்.
சீனாவின் Jiangsu மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மேல்தள வீட்டின் சமையலறையில் ப்ரோப்பேன் வாயு சிலிண்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். புகைமூட்டம் சூழ்ந்ததால், குடியிருப்பில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். ப்ரோப்பேன் வாயு தொட்டி மளமளவென எரிந்த போதிலும், அதனை பொருட்படுத்தாத காவல் அதிகாரி ஒருவர், பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க, தனது கையில் தொட்டியை சுமந்தவாறே கட்டடத்தின் கீழ்தளம் வரை எடுத்துச் சென்று அதனை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். காவல்துறை அதிகாரியின் துணிச்சல்மிக்க இந்தச் செயலை குடியிருப்புவாசிகளும், பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டினர்.