சிரியாவில் தீவிரவாதிகளின் நிலைகளைக் குறிவைத்து கூட்டுப் படையின் போர் விமானங்கள் குண்டுமழை : 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்
Feb 24 2017 10:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிரியாவில், தீவிரவாதிகளின் நிலைகளைக் குறிவைத்து கூட்டுப் படையின் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்ததில், 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் கூட்டுப்படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்தசில மாதங்களுக்கு முன்பு, சிரியாவின் அண்டை நாடான துருக்கியும் இந்த கூட்டுப்படையில் இணைந்தது. துருக்கி ராணுவம், தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, சிரியாவில் துருக்கியின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள Al-Bab உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துருக்கி ராணுவம் இடைவிடாது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் Al-Bab நகரில், ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகளைக் குறிவைத்து, கூட்டுப் படையின் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்ததில், 56 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், இந்த தாக்குதலின்போது, தீவிரவாத முகாம்கள், ஆயுதக் கிடங்குகள் உள்ளிட்ட ஏராளமான கட்டடங்கள், வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனங்கள் நிர்மூலமாகின.
இதனிடையே, Al-Bab அருகே இன்று அதிகாலை ஐ.எஸ். தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.