சீனாவில் உள்ள வனப்பகுதியில் பறக்கும் கண்காணிப்பு கேமராவை பறவை என எண்ணி வேட்டையாடிய புலிகளின் செயலை பார்வையாளர்கள் கண்டுரசிப்பு
Feb 23 2017 4:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் உள்ள வனப்பகுதியில் பறக்கும் கண்காணிப்பு கேமராவை பறவை என எண்ணி வேட்டையாடிய புலிகளின் செயல் காண்போரை நகைப்புக்குள்ளாக்கியது.
சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள Heilongjiang பகுதியின் வனப்பகுதியில் ஏராளமான செர்பியன் வகையை சார்ந்த புலிகள் வசித்து வருகின்றன. இவற்றின் நடவடிக்கையை கண்காணிக்கும் வகையில் அவ்வப்போது பறக்கும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பார்வையிடுவது வழக்கம். அந்தவகையில் வனத்தில் உலாவிக்கொண்டிருந்த புலிகள் கண்காணிப்பு கேமராவை பறவை என எண்ணி எட்டிப்பிடித்து உண்ண நினைத்தது. ஆனால் அதிலிருந்து புகை கிளம்பியதை கண்டு அதிர்ச்சி அடைந்த புலிகள் மிகுந்த ஏமாற்றமடைந்தது. புலிகளின் இந்த செயல் காண்போரை நகைச்சுவையூட்டும் வகையில் அமைந்துள்ளது.