பூமியை போன்று 7 புதிய கோள்களை கண்டுபிடித்தது நாசா - 3 கோள்களில் மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ளதாகவும் அறிவிப்பு
Feb 23 2017 11:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பூமியை போன்று 7 புதிய கோள்களை கண்டுபிடித்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இதில் 3 கோள்களில் மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சூரிய குடும்பத்தை தாண்டி உள்ள கோள்கள் பற்றியும், மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ள கோள்கள் குறித்தும் அறியும் வகையில், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு கழகமான நாசா, நேரலை ஒன்றை ஒளிபரப்பியது. இதில் ஸ்பிட்சர் மூலம் பூமியை போன்றே 7 புதிய கோள்களை கண்டறிந்ததாக நாசா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அந்த 7 கோள்களில், 3 கோள்கள் பூமியை போலவே மனிதர்கள் வசிப்பதற்கு தகுந்த சூழல் உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இக்கோள்கள் பூமியிலிருந்து 40 ஒளி ஆண்டு தொலைவில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசாவின் இந்த அறிவிப்பு விண்வெளி ஆய்வில் புதிய மைல் கல்லாக கருதப்படுகிறது.