பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து செயல்பட சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - சீன வெளியுறவுத் துறை அமைச்சரிடம் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நேரில் வலியுறுத்தல்
Feb 22 2017 8:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் திரு.ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து, இருதரப்பு விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். பயங்கரவாத எதிர்ப்பு விவகாரத்தில் இந்தியாவும், சீனாவும் இணைந்து செயல்பட சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
சீனா சென்ற இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் திரு.ஜெய்சங்கரை, நேற்று சீன உயர் அதிகாரி யாங் ஜீஷி வரவேற்றார். இதைத்தொடர்ந்து, இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இருநாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவும்போதிலும், பரஸ்பரம் இருதரப்பு உறவு கடந்த ஆண்டு வளர்ச்சியடைந்ததாக யாங் ஜீஷி குறிப்பிட்டார்.
இந்நிலையில், பெய்ஜிங்கில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.Wang Yi-ஐ, வெளியுறவுத்துறை செயலாளர் திரு. ஜெய்சங்கர் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். பயங்கரவாத எதிர்ப்பு விவகாரத்தில் இந்தியாவும், சீனாவும் இணைந்து செயல்பட சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என அப்போது வலியுறுத்தப்பட்டது. பயங்கரவாத எதிர்ப்பு விவகாரத்தில் சீனா மிகவும் உறுதியான, தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாகவும், இதனை சீனா செயல்படுத்தும் என நம்புவதாகவும் திரு.ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.