சீனாவில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Feb 22 2017 10:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல்வேறு நகரங்கள் ஸ்தம்பிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சீனாவில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக அங்கு பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பல்வேறு நகரங்களில் சாலையை முற்றிலும் பனி மூடியுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் பனிக்குவியல்கள் காணப்படுவதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. அங்குள்ளZhengzhou விமான நிலையத்தில் 236 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. இதில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக சில மணி நேரங்கள் விமான நிலையம் மூடப்பட்டது. இதனால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.