பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதல் - பொதுமக்கள் 7 பேர் உடல்சிதறி பலி - காவல்துறையினர் நடத்திய பதில் தாக்குதலில் 3 திவிரவாதிகள் உயிரிழப்பு
Feb 21 2017 4:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 7 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் Charsadda என்ற இடத்தில் அமைந்துள்ள மருத்துவமனை பகுதியில் தீவிரவாதிகள் சிலர் புகுந்து கையெறி குண்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். இதனால் பீதி அடைந்த பொது மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். பெரும் வெடிசத்தம் கேட்டதையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்புபடை வீரர்கள் தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்தநிலையில், பாதுகாப்புபடையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் மற்ற இரண்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 7 பேர் உடல் சிதறி உயிரிழந்ததோடு, 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அப்பகுதியை தங்கள் கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது.