சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் செங்டு நகரில் ஒரே இடத்தில் பல வண்ணங்களில் நிறுவப்பட்டுள்ள 4 லட்சம் காற்றாலைகள் : பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து
Feb 20 2017 2:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள செங்டு நகரில், ஒரே இடத்தில் பல வண்ணங்களில் நிறுவப்பட்டுள்ள 4 லட்சம் காற்றாலைகள், பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.
சீனாவில் வசந்தகாலம் தொடங்குவதை வரவேற்கும் வகையில், செங்டு நகரில் உள்ள காற்றாலை பண்ணையில், பல்வேறு வடிவங்களில் விதவிதமான வண்ணங்களில் காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றின் இறக்கைகள் சுழலும்போது, வண்ணங்களை அள்ளி தெளிப்பதுபோல் காட்சி தருகின்றன. இந்த காற்றாலை பண்ணையை உயரத்தில் இருந்து பார்க்கும்போது, பூக்கடல் போன்று தெரிகிறது. இதனால், இந்த இடத்திற்கு வருகை தரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காற்றாலை பண்ணைக்கு வந்து மலர்களை கண்டுகளியுங்கள் என இந்த காற்றாலை பண்ணை நிர்வாகம், பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
காற்றாலை பண்ணைக்கு வரும் பார்வையாளர்கள் மீது ரோஜா இதழ்கள் விழும் வகையில், தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் பண்ணை நிர்வாகம் தெரிவித்துள்ளது.