லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முகாகள் மீது அமெரிக்கா விமானத் தாக்குதல் - 80-க்கும் மேற்பட்டோர் பலி
Jan 20 2017 1:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
லிபியாவில், அமெரிக்க விமானப்படை, ஐ.எஸ். தீவிரவாதிகள் முகாமில் நடத்திய வான்வெளித் தாக்குதலில், 80க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இவர்கள் ஐரோப்பாவில் நடைபெற்ற தீவிரவாதச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிபியாவிலிருந்து செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாத குழுவினர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலையடுத்து, லிபியாவின் முக்கிய நகரான Sirte-வில் வான்வெளித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க விமானப்படையினர் நேற்று நடத்திய இந்தத் தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். Sirte-வில், 45 கிலோமீட்டர் சுற்றளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு செயளர் ஆஷ்கார்டர் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோவை பென்டகன் நேற்று வெளியிட்டுள்ளது.