ஈரானில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் கட்டட இடிபாடுகளில் சிக்கி தீயணைப்பு வீரர்கள் 20 பேர் உயிரிழப்பு : 70-க்கும் மேற்பட்டோர் காயம்
Jan 20 2017 12:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரானில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் கட்டட இடிபாடுகளில் சிக்கி தீயணைப்பு வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அடுக்குமாடி வணிகக் கட்டடத்தில் 500-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் பட்டறைகள் இயங்குகின்றன. இங்குள்ள 9-வது தளத்தில்ஏற்பட்ட தீ விபத்து, மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவி அப்பகுதியே புகைமூட்டத்துடன் காட்சியளித்தது. தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக கொழுந்துவிட்டு எரிந்த தீயால் கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்களில் 20 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும், டெஹ்ரான் மேயர் தெரிவித்தார்.