இந்தியாவுடன் போர் ஏற்பட்டால், சீன கவச வாகனப் படைகள் 48 மணிநேரத்திலும், பாராசூட் படைகள் 10 மணிநேரத்திலும் டெல்லியை சென்றடையும் : அந்நாட்டு அரசு தொலைக்காட்சி மறைமுக மிரட்டல்
Jan 19 2017 3:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவுடன் நட்புறவு கொண்டிருப்பதுபோல் காட்டிக்கொள்ளும் சீனா, அருணாச்சலப்பிரதேசத்திற்கு உரிமை கோருவதும், சீனப்படை வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி முகாமிட்டு, இந்திய ராணுவத்தினருடன் தகராறு செய்வதும் அவ்வப்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத அந்நாடு, இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை ஐ.நா. சபை மூலம் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கச் செய்யும் முயற்சிக்கு வெளிப்படையாக முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இதேபோல், இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுடன் சேர்ந்து அந்நாடு ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியின் வழியாக பொருளாதார வழித்தடத் திட்டத்தை சீனா செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், சீன அரசு தொலைக்காட்சி அண்மையில் ஒரு மறைமுக மிரட்டலை விடுத்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக போர் ஏற்பட்டால் சீனாவின் கவச வாகனப்படைகள் 48 மணிநேரத்திலும், பாராசூட் படைகள் 10 மணிநேரத்திலும் இந்திய தலைநகரான டெல்லியை சென்றடையும் என தெரிவித்துள்ளது.