அமெரிக்காவில் நடைபெற்ற Peoples Choice விருதுகள் வழங்கும் விழாவில் இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு விருது வழங்கப்பட்டது
Jan 19 2017 3:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற நட்சத்திரங்களுக்கான Peoples Choice விருதுகள் வழங்கும் விழாவில், இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு விருது வழங்கப்பட்டது.
மக்கள் விருப்பத்திற்கான சினிமா மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரங்களுக்கான விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், 20 விருதுகள் வழங்கப்பட்டன. இதில், கெவின் ஹார்ட், வெய்ன் ஜான்சன், டாம் ஹேங்ஸ், ஜானிடெப் உள்ளிட்ட நடிகர்கள் விருது பெற்றனர். இவ்விழாவில் இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு விருது வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக் கொண்ட பிரியங்கா சோப்ரா இவ்விருதை பெற்றது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகத் தெரிவித்தார்.