தைவானில் வருடாந்திர ராணுவ ஒத்திகை : அதிநவீன ஆயுதங்கள், கவச வாகனங்களுடன் ஏராளமான வீரர்கள் பங்கேற்பு
Jan 18 2017 6:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தைவானில் நடைபெற்ற வருடாந்திர ராணுவ ஒத்திகையில் அதிநவீன ஆயுதங்கள், கவச வாகனங்களுடன் ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர்.
சீனாவின் ஆதிக்கப் போக்கால் அந்நாட்டிலிருந்து தைவான் பிரிய நேரிட்டது. ஒருகாலத்தில் விரட்டியடித்த தைவானை தற்போது இணைய வேண்டும் என சீனா நிர்பதிந்து வருகிறது. ஆனால், இதற்கு இணங்க மறுத்து வரும் தைவான், சீனாவையே அச்சுறுத்தும் வகையில் ராணுவ ஒத்திகைகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் Taichug என்ற இடத்தில் வருடாந்திர ராணுவ ஒத்திகை நடைபெற்றது. நேற்று தொடங்கி 2 நாள் இந்த ராணுவ ஒத்திகை நடைபெற்றது. அதிநவீன ஆயுதங்கள், ராணுவ கவச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு, வீரர்கள் தத்ரூபாமாக போர் ஒத்திகையை நடத்தினர்.
தைவான் நீரிணையில் கடந்த வாரம் சீன போர்க்கப்பல்கள் நுழைந்ததைத்தொடர்ந்து இந்த ராணுவ ஒத்திகை நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.