மெக்சிகோவில் விலங்குகளின் ஆசி வழங்கும் நிகழ்ச்சி - செல்லப்பிராணிகளுடன் தேவாலயத்தில் குவிந்த மக்கள்
Jan 18 2017 12:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மெக்சிகோவில் விலங்குகளுக்கு ஆசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக ஏராளமான பொதுமக்கள் செல்லப்பிராணிகளுடன் தேவாலயத்தில் குவிந்தனர்.
மெக்சிகோவில் உள்ள தேவாலயங்களில் புனிதர் அந்தோணியாரின் நினைவாக விலங்குகளுக்கு ஆசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விலங்குகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர் புனிதர் அந்தோணியார். அவரது நினைவாக இந்த வழிபாடு நடைபெறுகிறது. பூனை, நாய், கிளி உள்ளிட்ட பல்வேறு செல்லப்பிராணிகளுக்கு வண்ணமயமான ஆடைகளை அணிவித்து தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் இந்த செல்லப்பிராணிகள் மீது புனித நீர் தெளிக்கப்பட்ட ஆசி வழங்கப்பட்டது.இதில் பொதுமக்கள் தாங்கள் வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுடன் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.