பிரேசில் நாட்டு சிறையில் மீண்டும் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பலியானோர் எண்ணிக்கை 30-ஆக உயர்வு
Jan 16 2017 1:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரேசிலில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இடையே மோதல்கள் ஏற்படுவதும், உயிர்ப் பலிகள் நேர்வதும் அடிக்கடி நிகழ்கிறது. இதன்காரணமாக புதிய சிறைகளை அமைக்கவும், தேசிய பாதுகாப்பு திட்டம் ஒன்றை தீட்டி செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் மற்றும் நீதித்துறை அமைச்சர் ஆகியோர் சமீபத்தில் அறிவித்தனர். இந்நிலையில், நடால் நகரில் உள்ள சிறையில் கைதிகளின் இரு தரப்பினருக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது. ஒருவரை ஒருவர் பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். கூச்சலும் குழப்பமும் நிலவியதால், சிறை வளாகம் போர்க்களம் போல காணப்பட்டது. இந்த வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, பதற்றம் நிலவிவரும் சிறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.