குடியிருப்புகள் மீது விழுந்து நொறுங்கிய துருக்கி விமான விபத்தில் 32 பேர் பலி - கிர்கிஸ்தான் நாட்டில் சோகச் சம்பவம்
Jan 16 2017 1:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
துருக்கிக்குச் சொந்தமான சரக்கு விமானம் ஒன்று, கிர்கிஸ்தானில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 32 பேர் உயிரிழந்தனர்.
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் உள்ள விமான நிலையத்தில், துருக்கிக்குச் சொந்தமான சரக்கு விமானம் தரையிரங்கிக் கொண்டிருந்தது. அந்த பகுதியில் அதிக அளவில் பனிமூட்டம் நிலவியதால், விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 4 விமானிகள் உள்பட 32 பேர் உயிரிழந்தனர். துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அந்த விமானம், இஸ்தான்புலில் இருந்து ஹாங்காங்கிற்கு சென்று கொண்டிருந்தது. வழியில் பிஷ்கேக் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது இந்த விபத்து நேரிட்டது.