சீனாவில் கடும் பனிப்பொழிவால் உறைந்து போயுள்ள அருவி : போர்வை போர்த்தியது போல் காட்சி அளிக்கும் ரம்மியமான இடங்களைக் காண குவியும் சுற்றுலா பயணிகள்
Jan 16 2017 11:30AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் அங்குள்ள அருவி உறைந்து போயுள்ளது. வெண் போர்வை போர்த்தியது போல் காட்சி அளிக்கும் ரம்மியமான இடங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
சீனாவில் கடந்த சில நாட்களாக உறைய வைக்கும் பனிப் பொழிவு நிலவுகிறது. இதன் காரணமாக பெய்ஜிங்கில் உள்ள அருவி உறைந்து பனிச் சிற்பம் போல் காட்சி அளிக்கிறது. வெண் போர்வை போர்த்தியது போல் காட்சி அளிக்கும் ரம்மியமான இடங்களைக் காண சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். மேலும் அவர்கள் மகிழ்வுடன் கூடி நின்று கைபேசியில் செல்பி எடுத்துக் கொண்டனர். பல்வேறு இடங்களில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பனி சூழ்ந்து காணப்படும் பகுதிகளில் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.