பெத்லஹேமில் மின்னொளியில் ஜொலிக்கும் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம் : வண்ணமிகு வாணவேடிக்கை நிகழ்ச்சியுடன் கிறஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் தொடக்கம்
Dec 4 2016 4:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிறிஸ்தவர்களின் புனித நகரான பெத்லஹேமில், மின்னொளியில் ஜொலிக்கும் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம் நிறுவப்பட்டு, வண்ணமிகு வாணவேடிக்கை நிகழ்ச்சியுடன் கிறஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கியுள்ளது.
இயேசு கிறிஸ்து அவதரித்த புனித நகரமான பெத்லஹேமிற்கு, ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, உலகம் முழுவதும் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் வருகை தந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி மகிழ்வர். இப்பண்டிகை தொடங்கியுள்ளது என்பதை அறிவிக்கும் விதமாக, பெத்லஹேம் தேவாலயத்தில் பாரம்பரியமாக மின்னொளியில் ஜொலிக்கும் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்படுவது வழக்கம். அதன்படி, கிறிஸ்துமஸ் பண்டிகையின் குறியீடாக விளங்கும் மின்னொளியில் ஜொலிக்கும் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம், Manger சதுக்கத்தில் நேற்று நிறுவப்பட்டது. தொடர்ந்து, பேண்டு வாத்தியங்கள் முழங்க, வண்ணமிகு வாணவேடிக்கை நிகழ்ச்சியுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.