சீன நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்தில் 17 பேர் பலி - சிக்கியுள்ள மேலும் பலரை மீட்க தீவிர நடவடிக்கை
Dec 4 2016 3:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுரங்கத்தில் சிக்கியுள்ள மேலும் 10 பேரை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
சீனாவின் தன்னாட்சி பகுதியான மங்கோலியாவின், Chifeng நகரில் நிலக்கரிச் சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்தில், 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், வழக்கம் போல் நேற்று நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுரங்கத்தினுள் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உடனடியாக சம்பவப் பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர், விபத்தில் சிக்கிய 4 பேரை பத்திரமாக மீட்டனர். மேலும், சுரங்கத்தில் சிக்கியுள்ள 10 பேரை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. வெடி விபத்துக்கான காரணம் குறித்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.