தென்கொரியா அதிபர் பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் - முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு
Dec 3 2016 6:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்கொரியா அதிபர் பார்க் கியுன் ஹை பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்கொரியா அதிபர் பார்க் கியுன் ஹை ஆட்சியில் பல்வேறு முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவரது நெருங்கிய தோழி சோய் சூன், போலி தொண்டு நிறுவனங்களின் பெயரால் பல கோடி நிதி திரட்டியதாக ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன்பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊழலில் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அதிபரின் முன்னாள் ஆலோசகர்கள் 2 பேரும் சிக்கி உள்ளனர். இந்த ஊழல் விவகாரத்தால், பார்க் கியுன் ஹையின் பதவியை பறிப்பதற்கான தீர்மானத்தை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து, ஓட்டெடுப்புக்கு விட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதனிடையே, பார்க் கியுன்னை பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.