இந்தோனேஷியாவில் ஜகார்தாவின் ஆளுநர் குர்-ஆன்ஐ அவமதித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு : 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி போராட்டம்
Dec 2 2016 9:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தோனேஷியாவில் ஜகார்தாவின் ஆளுநர், குர்-ஆன்ஐ அவமதித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டையடுத்து, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்தாவின் ஆளுநராக Basuki Tjahaja Purnama பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் இஸ்லாமியர்களின் புனித நூலாகிய குர்-ஆன்ஐ, ஆளுநர் அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜகார்தாவின் மையபகுதியில் உள்ள பெரிய பூங்கா ஒன்றில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமியர்கள், மத நிந்தனையில் ஈடுபட்ட ஆளுநர் Basuki Tjahaja Purnama-வை சிறையில் அடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.