அஃப்கனிஸ்தான் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததால் பரபரப்பு : இந்திய தூதரகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை எனத் தகவல்

Dec 1 2016 12:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

அஃப்கனிஸ்தான் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அஃப்கனிஸ்தானில் ராணுவம் மற்றும் பொதுமக்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், தலைநகர் காபூலில் வெளிநாட்டு தூதரகங்கள் உள்ள பகுதியில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. ஷாஷ்தரக் தூதரக மண்டல எல்லைக்குள் அமெரிக்க தூதரகத்தின் அருகே இந்த ராக்கெட் குண்டுகள் விழுந்து வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டு வெடித்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் உயிரிழப்பு ஏதேனும் ஏற்பட்டதா என்ற தகவல் உடனடியாக வெளியாகவில்லை. எனினும், இந்திய தூதரகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00