ஊதிய உயர்வு கோரி அமெரிக்கா முழுவதும் தொழிலாளர்கள் போராட்டம் : ஒரு மணிநேரத்திற்கு குறைந்தபட்ச ஊதியமாக 15 டாலர் நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தல்
Nov 30 2016 3:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஊதிய உயர்வு கோரி அமெரிக்கா முழுவதும், தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு மணிநேரத்திற்கு, குறைந்தபட்ச ஊதியமாக 15 டாலர் நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் சிகாகோ, டெட்ராய்டு, லாஸ்ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், ஊதிய உயர்வு கோரி, பேரணி உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டத்தில், உணவு விடுதிகளில் பணிபுரியும் ஊழியர்கள், குழந்தை நல காப்பகங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் என, பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
நியூயார்க் நகரில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்ட இப்போராட்டத்தில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு உணவு விடுதிகளின் தொழிலாளர்களும் தங்கள் வேலையை கைவிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ஊதிய உயர்வு கோரி அமெரிக்கா முழுவதும்போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள், ஒரு மணிநேரத்திற்கு குறைந்தபட்ச ஊதியமாக, 15 டாலர் நிர்ணயிக்க வேண்டும் எனவலியுறுத்தியுள்ளனர்.