ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சவாளியை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் எரித்து கொலை : இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சி

Oct 28 2016 9:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலியாவில், இந்திய வம்சவாளியை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் எரித்துக்கொலை செய்யப்பட்டதால், அங்கு வாழும் இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த Manmeet Alisher பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். பஞ்சாபைச் சேர்ந்த இவர், தனது பணியில் இருந்தபோது, அந்நாட்டு பயணி ஒருவரால் திடீரென தீ வைத்து கொளுத்தப்பட்டார். இந்த கொடூர சம்பவம் பேருந்து பயணிகள் முன்னிலையிலே நடைபெற்றது. பேருந்தில் இருந்த பயணிகள் பெரும்பாலானோர் வெளிநாட்டவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த கொடூர சம்பவத்தை செய்த 48 வயதான நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் அந்நாட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் இந்தியர் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம், அந்நாட்டில் வாழும் இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த படுகொலை சம்பவத்திற்கு, இந்தியா சார்பில் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00