எல்லையில் முகாமிட்டிருந்த ஆயிரக்கணக்கான அகதிகளின் கூடாரங்கள் அகற்றம் - பிரான்ஸ் காவல்துறை அதிரடி நடவடிக்கை
Oct 26 2016 6:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரான்ஸ் நாட்டு எல்லையில் முகாமிட்டுள்ள ஆயிரக்கணக்கான அகதிகளின் கூடாரங்களை அகற்றி, அவர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பிரான்ஸுக்கும் இங்கிலாந்திற்கும் இடையே இங்கிலீஷ் கால்வாயை ஒட்டிய துறைமுக நகரமான காலைஸில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் கூடாரங்கள் அமைத்து பல ஆண்டுகளாக தங்கியுள்ளனர். இந்நிலையில் அவர்களை அப்பகுதியிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றும் நடவடிக்கையை பிரான்ஸ் அரசு மேற்கொண்டுள்ளது. அகதிகளின் கூடாரங்களை அப்புறப்படுத்தி அவர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அகதிகள் முகாமில் இருந்த கடைகள் போன்றவையும் மூடப்பட்டிருந்ததால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.கூடாரங்களைவிட்டு வெளியேறிய அகதிகள் கேள்விகுறியாகியுள்ள தங்கள் எதிர்காலத்தை எண்ணி சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.