பாகிஸ்தானில் பிராந்திய உறுதிபாடு ஏற்பட வேண்டுமானால் தங்கள் மண்ணில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை அந்நாடு மேலும் தீவிரப்படுத்த வேண்டும் : அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தல்
Oct 26 2016 3:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில் பிராந்திய உறுதிபாடு ஏற்பட வேண்டுமானால், தங்கள் மண்ணில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை அந்நாடு மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தான் தங்கள் மண்ணில் சுதந்திரமாக உலாவி வரும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும், அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பாகிஸ்தானில் பிராந்திய உறுதிப்பாட்டை ஏற்படுத்த முடியும் என்றும் அமெரிக்க செய்திதொடர்பாளர் John Kirby தெரிவித்துள்ளார். மேலும், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா துணை நிற்கும் என்றும் John Kirby தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அரசுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்தை நடத்தப் போவதாக எதிர்க்கட்சி தலைவர் இம்ரான் கான் மிரட்டல் விடுத்துள்ளது பற்றி கூறுகையில், ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கும் என்றும், அமைதியான முறையில் உரிமைக்காகநடத்தப்படும் போராட்டத்திற்கும் ஆதரவு அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது உள்நாட்டு விவகாரம் என்றும், இதனை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும் என்றும் John Kirby தெரிவித்துள்ளார்.