அமெரிக்காவில் கர்ப்பிணிப் பெண்ணிற்கு கட்டியை அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின்போது, சிசுவுடன் வெளியே எடுக்கப்பட்ட கருப்பை மீண்டும் பொறுத்தம் : சுமார் 3 மாதம் கழித்து, அந்த பெண் ஆரோக்கியமான குழந்தையை ஈன்றெடுத்தார்
Oct 26 2016 2:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணிற்கு கட்டியை அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின்போது, சிசுவுடன் வெளியே எடுக்கப்பட்ட கருப்பை, மீண்டும் பொறுத்தப்பட்டது. சுமார் 3 மாதம் கழித்து, அந்த பெண் ஆரோக்கியமான குழந்தையை ஈன்றெடுத்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த மார்கரேட் போயிமர் என்ற பெண் கர்ப்பமாக இருந்தார். அவருடைய வயிற்றில் இருந்த பெண் கரு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அந்த பெண்ணின் கருவில் இருக்கும் குழந்தையின் முதுகின் பின்புறம் ஒரு கட்டி ஒன்று இருந்தது தெரியவந்தது. மேலும், அந்த கரு வளர வளர அந்த கட்டியும் பெரிதாக வளர்ந்தது. இதனால் குழந்தையின் கட்டியை அறுவை சிசிச்சை செய்து அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்து, பெண்ணின் வயிற்றில் இருந்து குழந்தையுடன் கருப்பையை வெளியே எடுத்தனர். அந்த குழந்தையின் முதுகில் இருந்த கட்டி அகற்றி மீண்டும் தாய்யின் கர்ப்ப பையில் அந்த குழந்தை மீண்டும் வைக்கப்பட்டது. இதுவே அந்த குழந்தையின் முதல் பிறப்பாக கருத்தப்பட்டது. இதையடுத்து, 12 வாரம் பின்னர் வெற்றிகரமாக இரண்டாவது முறையாக அந்த குழந்தை அறுவை சிகிச்சை மூலமாக முழுமையாக பெற்றெடுக்கப்பட்டு இரண்டாவது முறையாக இம்மண்ணில் பிறந்தது. இந்த நிகழ்வு மருத்துவ உலகில் அதிசயமாக கருதப்படுகிறது.