சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் அதிபர் Xi Jinping-க்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்படலாம் என தகவல்
Oct 25 2016 4:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 18-வது மத்திய குழுக்கூட்டம், தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. சீன அதிபர் Xi Jinping, பிரதமர் Li Keqiang உள்ளிட்ட கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். 4 நாட்கள் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. தற்போது, கம்யூனிஸ்ட் கட்சியின் விதிமுறைப்படி அதிபர் Xi Jinping, வரும் 2022-ம் ஆண்டு வரை பதவி வகிக்கலாம். அவரது பதவி காலத்தை நீட்டிப்பது தொடர்பாக விவாதம் நடத்தப்படலாம் என தெரிகிறது. தற்போதைய சூழ்நிலையில், கட்சி, ராணுவம், அதிபர் பதவி என நாட்டின் மிகவும் வலிமை வாய்ந்த தலைவராக உள்ள Xi Jinping-க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படலாம் என கருதப்படுகிறது. மேலும் இந்தக் கூட்டத்தில், அரசின் செயல்பாடுகள் குறித்து அதிபர் தலைமையிலான அரசியல் விவகாரக்குழு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.