சிரியாவில் 3 நாட்கள் போர்நிறுத்த அறிவிப்பு முடிவுக்கு வந்தது : ரஷ்ய, அரசு படைகளுடன் இணைந்து அலெப்போவில் கடும் தாக்குதல்
Oct 25 2016 8:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிரியாவில் 3 நாட்கள் போர்நிறுத்த அறிவிப்பு முடிவுக்கு வந்ததை அடுத்து, ரஷ்ய படைகள், அரசு படைகளுடன் இணைந்து அலெப்போவில் கடுமையான தாக்குதலைத் தொடங்கியுள்ளன.
சிரியாவில் அரசு படைகள், அங்குள்ள கிளர்ச்சியாளர்கள் குழு மற்றும் ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக போரிட்டு வருகிறது. இந்நிலையில், சிரிய அரசுப்படைகளுக்கு ஆதரவாக ரஷ்ய விமானப் படையினர் சண்டையிட்டு வருகின்றனர். சிரிய கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள அலெப்போ நகரில் தீவிர தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், மருத்துவ உதவிகள், உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக கடந்த 20ம் தேதி முதல் ரஷ்யா போர் நிறுத்தத்தை அறிவித்தது. அதன்படி, ரஷ்ய விமானங்கள் குண்டு வீசுவதை நிறுத்தின. ஆனால், சிரிய கிளர்ச்சியாளர்கள் ரஷ்யாவின் போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில், 3 நாட்களுக்குப் பிறகு நேற்று முதல் அலெப்போ நகரில் ரஷ்யா தனது கடுமையான தாக்குதலைத் தொடங்கியுள்ளது.